Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 23: அடியைக் குறியாது அறியாமையினால் 26 Jul 2023 அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக்ரம வேல் மகிபா குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே. பொருள்: அழகிய வேலை உடையவனே , மின்னல் கொடி போன்ற குறமகளைச் சேர்பவனே, முருகா ! அறியாமையினால் நான் உன் பாதங்களைத்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 22 காளைக் குமரேசன் எனக் கருதித் 26 Jul 2023 காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே. பொருள் : கமுகின் பாளை போன்ற கூந்தலை உடைய வள்ளியின் பதம் பணியும் மேரு மலையைப் போன்ற பெருமை வாய்ந்த ,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 21 கருதா மறவா நெறிகாண 23 Jul 2023Jul 25, 2023 கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய் வரதா முருகா மயில் வாகனனே விரதா சுரசூர விபாடனனே பொருள் : நினைவு, மறவாமை என்ற நிலையில் நான் நிலைத்திருக்க உன் இரண்டு திருவடிகளில் எனக்கு சரணாகதியை என்று தருவாய், எல்லோருக்கும்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 20 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 23 Jul 2023 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே. பொருள் : மிகவும் அரிதான மெய்ப்பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும் , வேதத்தின் மகா வாக்கியங்களின் அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தையும் எனக்கு உபதேசமாக…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 19 வடிவும் தனமும் மனமும் 23 Jul 2023 வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா அடியந்தமிலா அயில்வேல் அரசே மிடியென்று ஒருபாவி வெளிப்படினே. விளக்கம் : ஆதி அந்தமில்லா அரசே முருக பெருமானே, சிவபெருமான் தந்த வஜ்ர வேலை கையில் வைத்திருப்பவரே, அறியாமை என்னும் வறுமை ஆகிய…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 18 உதியா மரியா உணரா 23 Jul 2023 உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா வதிகாவல சூர பயங்கரனே. விளக்கம் : பிறப்பு - இறப்பு இல்லாதவரும் , உணரவோ மறக்கவோ முடியாதவரும் பிரமானாலும் பெருமாளும் அறிய முடியாத பரிசுத்தமான…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 17 யாமோதிய கல்வியும் எம்மறிவும் 23 Jul 2023 யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே. விளக்கம் : நாம் கற்ற கல்வி, அறிவு எல்லாமே வேலவன் தந்த கொடை, அதனால் இந்த பூவுலகின் மீதுள்ள மையல் போய்,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 16 பேராசை எனும் பிணியில் 23 Jul 2023 பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ வீரா முதுசூர்பட வேல் எறியும் சூரா சுரலோக துரந்தரனே. விளக்கம் : ஆசை எனும் நோயில் நான் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறக்கின்றேனே, இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 15 முருகன் குமரன் குகன் 23 Jul 2023 முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. விளக்கம் : முருகா!, குமரா! குஹா! என்று நான் என்று கண்களில் நீர் மல்க உன் மந்திரங்களை கூற…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 14 கைவாய் கதிர்வேல் முருகன் 23 Jul 2023 கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடும் செவியாம் ஐவாய்வழி செல்லும் அவாவினையே. பொருள்: கைகளிலே வேல் தாங்கிய முருகபெருமானின், கழல் அணிந்த பாதங்களைப் பற்றி, மனமே நீ ஒழியவாய், நீ ஒழிந்தால் தான் ஆன்மா…
You must be logged in to post a comment.