Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான் 28 Jul 2023 செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கிதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே. பொருள் - மின்னலை ஒத்த வாழ்வை நான் இதுநாள் வரை விரும்பினேனே , இதுவே விதியின் பயனோ.…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 26 ஆதாரம் இலேன் அருளைப் பெறவே 28 Jul 2023 ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒருசற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத மனோ தீதா சுரலோக சிகாமணியே. பொருள் : வேதங்கள், ஆகமங்கள் தரும் ஞானத்தை நொடி பொழுதிற்குள் தர வல்லவரே, மனதிற்கு அப்பாற்பட்டவரே, மனதை அழிப்பவரே, தேவ லோக…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 25 மெய்யேஎன வெவ்வினை வாழ்வை 28 Jul 2023 மெய்யேஎன வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே. பொருள்: இந்த உலக வாழ்வை உண்மை என்று நம்பி கர்ம வினைகளால் சூழ்ந்து நான் இங்கும் அங்கும் அலைகிறேனே, உடல்,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 24 கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே 28 Jul 2023 கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும் போர்வேல புரந்தர பூபதியே. பொருள் : சூரபத்மன் , அவனுடைய குலம் , கிரவுஞ்ச மலை ஆகியவற்றை உன்னுடைய கூறிய போர் வேலால் துளைத்து இந்திரனுக்கு தேவலோகத்தை…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 23: அடியைக் குறியாது அறியாமையினால் 26 Jul 2023 அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக்ரம வேல் மகிபா குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே. பொருள்: அழகிய வேலை உடையவனே , மின்னல் கொடி போன்ற குறமகளைச் சேர்பவனே, முருகா ! அறியாமையினால் நான் உன் பாதங்களைத்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 22 காளைக் குமரேசன் எனக் கருதித் 26 Jul 2023 காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே. பொருள் : கமுகின் பாளை போன்ற கூந்தலை உடைய வள்ளியின் பதம் பணியும் மேரு மலையைப் போன்ற பெருமை வாய்ந்த ,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 21 கருதா மறவா நெறிகாண 23 Jul 2023Jul 25, 2023 கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய் வரதா முருகா மயில் வாகனனே விரதா சுரசூர விபாடனனே பொருள் : நினைவு, மறவாமை என்ற நிலையில் நான் நிலைத்திருக்க உன் இரண்டு திருவடிகளில் எனக்கு சரணாகதியை என்று தருவாய், எல்லோருக்கும்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 20 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 23 Jul 2023 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே. பொருள் : மிகவும் அரிதான மெய்ப்பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும் , வேதத்தின் மகா வாக்கியங்களின் அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தையும் எனக்கு உபதேசமாக…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 19 வடிவும் தனமும் மனமும் 23 Jul 2023 வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா அடியந்தமிலா அயில்வேல் அரசே மிடியென்று ஒருபாவி வெளிப்படினே. விளக்கம் : ஆதி அந்தமில்லா அரசே முருக பெருமானே, சிவபெருமான் தந்த வஜ்ர வேலை கையில் வைத்திருப்பவரே, அறியாமை என்னும் வறுமை ஆகிய…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 18 உதியா மரியா உணரா 23 Jul 2023 உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா வதிகாவல சூர பயங்கரனே. விளக்கம் : பிறப்பு - இறப்பு இல்லாதவரும் , உணரவோ மறக்கவோ முடியாதவரும் பிரமானாலும் பெருமாளும் அறிய முடியாத பரிசுத்தமான…
You must be logged in to post a comment.