English Articles

செய்யுள் 7 கெடுவாய் மனனே

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினையாவையுமே. பொருள்: ஓ மனமே நீ ஒழிந்து போவாய், நீ நல்ல கதி சேர்வதற்கு, இவ்வளவு நாட்கள் மறைந்து வைத்த பொருள் எல்லாம்…

செய்யுள் 6 திணியான மனோ சிலை

திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ பணியாஎன வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே. விளக்கம் : கற்சிலை போன்று இறுகிய மனதில் உன் இரு கால்கள் படாமல், அந்த மனம் மலருமோ(இல்லை இறைவனின் திருவடி ஸ்பரிசம்…

செய்யுள் 5 மகமாயை களைந்திட

மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே. அகமாடை மடந்தையர் என்றயரும் ஜகமாயையுள் நின்று தயங்குவதே. பொருள்: மகா மாயையாகிய இந்த உலக வாழ்வின் பற்று, மனம், புத்தி மற்றும் அஹங்காரம் மீது உள்ள பற்று போன்றவற்றை அழிக்க கூடிய ஆறுமுகம்…

செய்யுள் 4 வளைபட்ட கைம் மாதொடு

வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும் தளைபட்டழியத் தகுமோ தகுமோ கிளைபட்டெழு சூருரமும் கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே. பொருள்: வேலவா! அன்று சூரனுக்கு எதிரான போரில், அவன் மார்பையும், க்ரௌஞ்ச மலையையும், அசுர சேனைகளையும் அழிக்க வேலை வீசி எறிந்தவனே,…

செய்யுள் 3 வானோ புனல்பார்

வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோ தயமோ நவில் நான் மறையோ யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ பொருளாவது ஷண்முகனே. விளக்கம் ஷண்முக பெருமானே!, மெய்ப்பொருள் ஆவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின்…

செய்யுள் 2 உல்லாச நிராகுல

ஆன்மீக வாழ்க்கையில் முதல் படியாகிய நாம ஜெபத்தில் ஆரம்பித்து, கடைசியில் இறைவனுடன் ஒரு ஆன்மாவை இணைப்பதே கந்தர் அனுபூதியின் ஐம்பத்தொரு பாடல்களும், முதல் பாடலில் நாம ஜெபத்தை ஒரு சாதகனுக்கு அறிமுகம் செய்த அருணகிரிநாதர் , இரண்டாம் பாடலில் சாதகனுக்கு ஆறு…

செய்யுள் 1 – ஆடும் பரி வேல்

ஆன்மீக வாழ்வின் முதல் படியில் தொடங்கி இறைவனை உணர்ந்து கலப்பது வரை ஒவ்வொரு படியாக ஒரு சாதகனுக்கு விளக்கி அவன் வாழ்வையும் வளத்தையும் உயர்த்துவது கந்தர் அனுபூதி, இதையே மற்ற சமய நூல்களும் செய்யும். முதல் படியாக ஒவ்வொரு சாதகனுக்கும் அவனுடைய…

காப்பு 

நெஞ்சக்   கனகல்லு   நெகிழ்ந்து   உருகத் தஞ்சத் தருள்   சண்முகனுக்கு   இயல்சேர் செஞ்சொற்   புனைமாலை   சிறந்திடவே பஞ்சக்கரவானை   பதம்   பணிவாம். பொருள் : கல்லாகிய நெஞ்சம், நெகிழ்ந்து உருகி ,…